ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி முன்னணி ஹீரோக்களோடு நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தேவ் படம் பிளாப் ஆன பிறகு அவர் நடிக்கவிருந்த சில படங்கள் கைநழுவி போனது என கூறப்படுகிறது.
மேலும் ராகுல் ப்ரீத் சிங் அடுத்து நடிகர் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கும் படத்தில் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம்.
இதுவரை ஒருகோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த அவர் தற்போது 50 லட்சம் அதிகரித்துள்ளார். இனி மற்ற படங்களுக்கும் இதே சம்பளத்தை தான் அவர் கோரவுள்ளாராம்.