ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் ‘ராஜா பீமா’ படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு பின் ஆரவ் நாயகனாக நடிக்கும் ‘ராஜா பீமா’ திரைப்படத்தினை நரேஷ் சம்பத் இயக்குவதுடன், இந்தப் படத்தில் ஆரவ்விற்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கின்றார்.
கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், ஓவியா ஆரவ்வுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் யானைக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மனிதனுக்கும் விலங்குகளிற்குமிடையில் காணப்படும் முரண்பாடுகளைக்கூறும் திரைப்படமாக இது உருவாகியிருக்கிறது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தைக் கோடை விடுமுறையில் வெளியிடுவதற்குப் படக்குழு திட்டமிட்டுள்ளது.