பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அவரது கணவரும் குடும்பமும் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.
இதனால் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மட்டுமல்லால் வெளியில் நடப்பதையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், வாலிபர் ஒருவர், அவருடைய பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது என கூறியுள்ளார்.
அந்த வாலிபர் குறித்து சின்மயி கூறுகையில், விளையாட்டாக ஆசிரியரை கிண்டல் செய்தவரை மிரட்டி தனக்காக பயன்படுத்தியுள்ளார் அவரது நண்பர். மற்ற விஷயத்திற்காக தொடங்கி கடைசியில் பாலியல் ரீதியில் வந்து முடிந்துள்ளது அந்த மிரட்டல். ஒருநாள் அந்த வாலிபரை அவரது நண்பர் தனது வீட்டிற்கு அழைத்து கற்பழித்துள்ளார்.
இதனை அந்த நபர் தனது தந்தையிடம் கூற அவர் அந்த நண்பனை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார்.
Trigger warning.
I got this message from a boy being bullied and sexually abused by a classmate.
Men need to start talking. About abuse that happens to you from other men. pic.twitter.com/1kjsTC1bAD
— Chinmayi Sripaada (@Chinmayi) February 22, 2019