தெலுங்கில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ரஷ்மிகா மந்தானா, முதல் முறையாக தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேவ் திரைப்படத்தைத்தொடர்ந்து கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் ரஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.