வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது. அதனால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படத்தையோ, மன்றத்தின் கொடியையோ, எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பயன்படுத்தக்கூடாது.
தமிழகத்தின் முக்கிய பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைந்து யார் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல், வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். 12 மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.