ரகுமான் உலகமே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர். இவர் சர்வம் தாளமயம் படத்திற்காக ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் இவர் பேசுகையில் ‘ஒருவரின் ஜாதி, மதம் வைத்து எப்போதும் அவர்களை ஒதுக்க கூடாது. ஒதுக்கினாலும் நீ ஒடுங்கிவிடக்கூடாது.
எனக்கு இந்த விஷயத்தில் இன்ஸ்பிரேஷனே இளையராஜா சார் தான், அவர் எங்கிருந்து வாழ்க்கையை தொடங்கி இன்று அவர் தொட்டு இருக்கும் உயரமே ஒரு சான்று.
உன்னை அமுக்கினால் நீ மீண்டு வரவேண்டும், என்ன 1 வருடமோ, 2 வருடமோ, 20 வருடமோ போராடி வெற்றி பெற வேண்டும், பிறகு யாருமே பேச மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.