தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2016ல் வெளியாகியிருந்த படம் கொடி. இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.
தற்போது இவரது இயக்கத்தில் மீண்டும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வரும் தனுஷ் இந்த படத்திற்கு அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதில் இருந்து தனுஷ் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை.