அறம் படத்தின் தாக்கம் இன்னும் பலரின் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருக்கலாம். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கடந்த 2017 ல் வந்த இப்படம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தைகளை மையமாக கொண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட போவதாகவும் அதில் சமந்தா நடிக்கிறார் என தகவல் சுற்றி வந்தது. ஆனால் சமந்தாவும் இதை மறுத்திருக்கிறார். அதே வேளையில் படத்தை வெளியிட்ட KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அது முற்றிலும் வதந்தி. நயன்தாரா பிகில், தர்பார் படங்களில் பிசியாக இருக்கிறார்.
அது முடிந்ததும் மீண்டும் எங்களோடு இணைந்து படம் செய்கிறார். ஆனால் அறம் 2 பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.