நடிகர் அருண்விஜய்க்கு ‘தடம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அது அவருடைய சினிமா வாழ்வை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த நிலையில், அருண்விஜய் அடுத்து நடிக்கப்போகும் திரைப்படம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகின்றார். இவர் ஏற்கனவே ‘துருவங்கள் 16’, ‘நரகாசுரன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் அருண்விஜய், கார்த்திக் நரேன் ஆகிய இருவருக்குமே ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.