தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்-ஷாலினி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண்களின் மீது அதிக மரியாதை வைத்திருக்கும் அஜித், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் செய்யும் வேலைகள் மீது நாம் காட்ட வேண்டிய அக்கறை குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.
இந்த அன்புதான் அஜித்தை ஷாலினி காதலிக்க அச்சாணியாக அமைந்துள்ளது. அஜித்தின் முதல் காதலி ‘பைக்’. இரண்டாவது தான் ஷாலினி. இதனை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
திருமணத்திற்கு முன்னர் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் அஜித், ஷாலினி கூறியதையடுத்து அதனை கைவிட்டார் இன்றுவரை அதனை தொடவில்லையாம்.
‘அமர்க்களம்’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது.அந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில், ஷாலியின் கையில் அஜித் கத்தியால் கிழித்துள்ளார்.
தன்னால் இப்படி ஷாலினுக்கு நடந்துவிட்டதே என்று அஜித் பரபரப்பாக இருக்க, எவ்வித அலட்டலும் இல்லாமல், பரவாயில்லை என்று கூறி நிதானமாக இருந்துள்ளார் ஷாலினி.ஷாலினியின் அந்த நிதானம் அஜித்திற்கு பிடித்துவிட, அப்போதே அவரது இதயத்தில் ஷாலினி குடிகொள்ள ஆரம்பித்துள்ளார்.அமர்க்களம் திரைப்படத்தின் போதே இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் ஷாலினின் கண்ணுக்குள்ளும், செயலுக்குள்ளும் ஒளிந்திருப்பதை உணர்ந்த அஜித், எனக்கான தேடல் இவள்தான் என்பதை அறிந்து, நேராக ஷாலினியிடம் சென்று உன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.இதே ஆசை, ஷாலினியின் மனதுக்குள்ளும் இருந்ததால், காதலுக்கு பச்சைகொடி காட்டியதால் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
ஷாலினி கிறிஸ்து மதத்தை சார்ந்தவர், அஜித் பிராமின், இது அவர்களது காதலுக்கும், வாழ்வியலுக்கும் ஓர் தடையாக இருந்ததே இல்லையாம்.காரணம் யாரும், மற்றொருவருக்காக மதம் மாறவில்லை. மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் வளர்வதற்காக மட்டுமே தவிர, காதலுக்கு தடையாய் அமைவதற்கு அல்ல.
கணவன்- மனைவி ஆகிய இருவரும், ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து, தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்டாலே இல்லறம் இனிக்கும் என்று கூறுகிறார் தல.
படப்பிடிப்பின்போது வெளியூர்களுக்கு சென்றால் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்போதும் ‘i Love You’ என சொல்லிக்கொண்டே இருப்பாராம். தனது வாழ்க்கையின் தடைகளை உடைத்து தான் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு ஷாலினிதான் இருந்துள்ளார் என பெருமையாக கூறியுள்ளார் ’தல அஜித்’.