பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். டாப் 3 ல் ஒருவராக இவர் வருவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சின்ன ரோலில் நடித்த இவருக்கு அவன் இவன் படம் முகத்தை சினிமாவில் முழுமையாக பதிக்க வைத்தது.
பின் தெகிடி படத்தில் அவர் நடித்திருந்தாலும் அதன் பின் வந்த படங்கள் அவருக்கு சொல்லும் படியாக இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தற்போது மீண்டும் தெகிடி படத்தின் ஹீரோ அசோக் செல்வனுடன் இணைகிறார்.
4 வருடங்கள் கழித்து இருவரும் படத்தில் ஜோடி சேர்கிறார்கள். திகில் கதையாக உருவாகும் இப்படத்தை சந்தீப் ஷியாம் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளாராம்